நடுவானில் திடீரென தீப்பிடித்த செல்போன்! - அச்சத்தில் உறைந்த விமான பயணிகள்!

நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, செல்போன் ஒன்று திடீரென்று தீப்பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
x
நடுவானில் திடீரென தீப்பிடித்த செல்போன்! - அச்சத்தில் உறைந்த விமான பயணிகள்!

நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, செல்போன் ஒன்று திடீரென்று தீப்பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அசாம் மாநிலம் திப்ருகார் விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு இண்டிக்கோ நிறுவனத்தின் விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, விமானத்தின் உள்ளே இருந்த பயணியின் கைப்பையில் இருந்து திடீரென்று கரும்புகை வந்துள்ளது. இதையடுத்து எச்சரிக்கையான ஊழியர்கள் அருகில் சென்று பார்த்த போது தீப்பொறியுடன் கரும்புகை வெளிவர தொடங்கியது. உடனடியாக விமானத்தில் இருந்த தீயணைப்பு கருவிகள் மூலம் தீ அணைக்கப்பட்டது. தொடர்ந்து பையில் இருந்த செல்போன் தீப்பிடித்து உள்ளது கண்டறியப்பட்ட நிலையில், விமானத்தில் பெரும் பதற்ற நிலை காணப்பட்டது. இந்த சம்பவத்தால் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படாத நிலையில், அனைவரும் பத்திரமாக தரையிறங்கியதாக இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்