"அமைச்சராக இருந்தாலும் கோயிலில் அனுமதிக்கவில்லை" - மனக்குமுறலை வெளியிட்ட முன்னாள் அமைச்சர்

கர்நாடகாவின் தும்கூர் மாவட்டத்தில் நடைபெற்ற அம்பேத்கர் ஜெயந்தி நிகழ்வில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் பங்கேற்று பேசினார்.
x
"அமைச்சராக இருந்தாலும் கோயிலில் அனுமதிக்கவில்லை" - மனக்குமுறலை வெளியிட்ட முன்னாள் அமைச்சர்

கர்நாடகாவின் தும்கூர் மாவட்டத்தில் நடைபெற்ற அம்பேத்கர் ஜெயந்தி நிகழ்வில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் பங்கேற்று பேசினார். அப்பொழுது, பிஎச்டி முடித்து பட்டம் பெற்று, அமைச்சராக இருந்த போதிலும் தலித் என்ற ஒரே காரணத்திற்காக கோயிலுக்குள் நுழைய தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக மனக்குமுறலை வெளிப்படுத்தினார். கோயில் குளத்தில் நாய் கூட சுதந்திரமாக தண்ணீர் குடிக்கலாம், ஆனால் தலித் மக்கள் அந்த குளத்து நீரை தொட அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்ற முன்னாள் அமைச்சரின் பேச்சு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.


Next Story

மேலும் செய்திகள்