கள்ளக்காதலியோடு பட்டப்பகலில் உல்லாசம்... வீட்டுக்குள்ளேயே பிடித்து வெளுத்துவிட்ட மனைவி!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ளது சூர்யா பேட்டை நகர்...
x
தெலுங்கானா மாநிலத்தில் உள்ளது சூர்யா பேட்டை நகர். அங்கிருந்த ஒரு வீட்டிலிருந்து வந்த பெண்ணின் கதறல் சத்தம் அக்னி வெயிலையே அலற வைத்தது.

வீட்டுக்குள் குடும்பமே சேர்ந்து இளம் பெண் ஒருவரை வெளுத்து வாங்கி கொண்டிருந்தனர்...

மற்றொரு புறமோ பெண் ஒருவர், இளைஞரின் கன்னம் சிவக்க கைகளால் அர்ச்சனை செய்திருக்கிறார்.
அலறல் சத்தம் கேட்டு வந்த போலீசாராலும், பொதுமக்களாலும் அந்த கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை...

அப்படி என்ன நடந்தது ஏன் இந்த கொலை வெறி தாக்குதல் என போலீசார் விசாரணை நடத்தி இருக்கிறார்கள். விசாரணையில் வெளிவந்த உண்மை அனைவரையும் திகிலடையச் செய்திருக்கிறது.

அரைகுறையாக இங்கே கும்பிடு போடுபவர் சூர்யா பேட்டை நகரைச் சேர்ந்த பானு பிரகாஷ். இவரை அடித்து துவைத்தது வேறுயாரும் இல்லை. இவர் தாலி கட்டிய மனைவி தான்.

ஆம்... பானு பிரகாஷ் ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்திருக்கிறார்.

பானுபிரகாஷுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்திருக்கிறது. அந்த இல்லறத்திற்குச் சான்றாக இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.

இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்த பிறகு பானுபிரகாஷுக்கு அவரது மனைவியின் மீது காதல் குறைந்திருக்கிறது.

இதனால் அடிக்கடி குடும்பத்தில் சண்டை சச்சரவு வெடித்த வண்ணம் இருந்திருக்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பானுபிரகாஷ் சேர்ந்து வாழ விருப்பமில்லாமல் மனைவியிடம் விவாகரத்து கேட்டிருக்கிறார்.

ஆனால் பானுபிரகாஷின் மனைவியோ விவாகரத்து கொடுக்க சம்மதிக்கவில்லை. இதனால் அந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையிலேயே இருந்திருக்கிறது.

திருமணத்திற்குச் சீதனமாகக் கொடுத்த நகை, பணம், சொத்துக்களை எல்லாம் எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார் பானுபிரகாஷ். குடும்ப செலவிற்கு கூட பணம் கொடுக்காமல், இரண்டு ஆண்டுகளாக மனைவி குழந்தைகளை விட்டு பிரிந்து தனிமையில் வசித்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில் பானுபிரகாஷுக்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அந்த பழக்கம் கள்ளகாதலாக மாற இருவரும் கணவன் மனைவி போலவே வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

இந்த விஷயங்கள் பானுபிரகாஷின் மனைவியின் காதுகளுக்கு சென்றிருக்கிறது. கொதித்து போன அவர், உறவினர்களோடு பானுபிரகாஷின் வீட்டிற்கு படையெடுத்திருக்கிறார்.

அங்கே பட்டப்பகலிலேயே உல்லாசத்திலிருந்த பானுபிரகாஷையும், அவரின் கள்ளக்காதலியையும் கையும் களவுமாகப் பிடித்து கதற கதற அடித்திருக்கிறார்கள்.

இருவரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்..


Next Story

மேலும் செய்திகள்