அரசு கிடங்கில் பயங்கர தீ விபத்து - ரூ.38 கோடி மதிப்பிலான சீருடைகள் தீயில் நாச

தெலங்கானா மாநிலம் வாரங்கலில் அரசு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள் தீயில் எரிந்து நாசமாகின.
x
தெலங்கானா மாநிலம் வாரங்கலில் அரசு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள் தீயில் எரிந்து நாசமாகின. தர்மபுரம் கிராமத்தில் உள்ள அரசு கிடங்கில் சீருடைகள் உள்ளிட்டப் பொருட்கள் வைக்கப்பட்டு இருந்துள்ளன. இந்நிலையில், நேற்றிரவு திடீரென கிடங்கில் தீப்பிடித்து, மளமளவென பரவியுள்ளது. இதனையடுத்து, 7 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்ட நிலையில், 38 கோடி ரூபாய் மதிப்பிலான சீருடைகள் தீக்கிரையாகின. தீ விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தர்மபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்