மூணாறில் வலம் வரும் 'படையப்பா' யானை - மக்கள் அச்சம்

கேரள மாநிலம் மூனாறில் குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானை நடமாட்டத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
x
கேரள மாநிலம் மூனாறில் குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானை நடமாட்டத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த 2 மாதங்களாக மூணாறில் படையப்பா எனும் காட்டு யானை வலம் வருகிறது. சமீபத்தில் பேருந்தை வழிமறித்து, முன்பக்க கண்ணாடியை தும்பிக்கையால் அழுத்தி உடைத்தது. இந்நிலையில் மூணாறு காலனி பகுதிக்கு நேற்று இரவு புகுந்த படையப்பா யானை, வீட்டில் வைத்திருந்த வாழை மரங்களை பிடுங்கி தின்றது. சிறிதுநேரம் அங்கேயே நின்றிருந்த யானை, பின்னர் வனத்திற்குள் சென்று மறைந்தது. இதுவரையில் மனிதர்கள் மீது யானை எந்த தாக்குதலையும் நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்