திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அனுமந்த வாகனத்தில் ராமர் வீதியுலா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ராம நவமியையொட்டி, அனுமந்த வாகனத்தில் சுவாமி, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
x
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அனுமந்த வாகனத்தில் ராமர் வீதியுலா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ராம நவமியையொட்டி, அனுமந்த வாகனத்தில் சுவாமி, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் வளாகத்தில் உற்சவ மூர்த்திக்கு வில் அம்புடன் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர், வாகன மண்டபத்தில் அனுமந்த வாகனத்தில் ராமச்சந்திர மூர்த்தி எழுந்தருளி, நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்