லஷ்கர்-இ-தொய்பா தளபதி சுட்டுக் கொலை!

ஜம்மு காஷ்மீரில் இரு தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
x
லஷ்கர்-இ-தொய்பா தளபதி சுட்டுக் கொலை.

ஜம்மு காஷ்மீரில் இரு தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் சிர்ஹாமா மற்றும் குல்காம் பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்பொழுது தீவிரவாதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த ஒருவர் சுட்டுக் கொள்ளப்பட்டார். இதேபோன்று சிர்ஹாமாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தளபதியான நிசார் தார் சுட்டுக் கொல்லப்பட்டதாக காஷ்மீர் ஐஜிபி விஜய்குமார் தெரிவித்துள்ளார். தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்