மகனை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய தந்தை

மகனை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய தந்தை
மகனை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய தந்தை
x
பெங்களூரு சாம்ராஜ்பேட் பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்திரா. ரெடிமேட் ஆடைகள் மொத்த வியாபாரம் செய்து வரும் இவர் வியாபாரத்தை கவனிக்கும் பொறுப்பை தனது மகன் அர்ப்பித்திடம் ஒப்படைத்திருந்தார். 

இந்நிலையில் வியாபாரத்தில் சுமார் ஒன்றரை கோடிக்கான கணக்கு வழக்குகள் சரியாக காட்டவில்லை என அப்பா மகன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதில் ஆத்திரமடைந்த சுரேந்திரா பெற்ற மகன் என்றும் பாராமல் அர்ப்பித் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்தி உள்ளார். 

இதில் படுகாயமடைந்த மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தின் மொத்த நிகழ்வுகளும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இச்சம்பவம் தொடர்பாக பெங்களூரு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்