ஆட்டிற்கு தாலிக்கட்டி திருமணம் செய்த இளைஞர்

தோஷ நிவர்த்திக்காக ஆட்டை இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட விநோதம் ஆந்திராவில் நிகழ்ந்துள்ளது.
x
தோஷ நிவர்த்திக்காக ஆட்டை இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட விநோதம் ஆந்திராவில் நிகழ்ந்துள்ளது. கிருஷ்ணா மாவட்டத்தின் நூஜ்வீடு கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்ற இளைஞருக்கு திருமணம் செய்ய வரன் பார்க்கப்பட்டது. அப்பொழுது ரமேஷிற்கு தார தோஷம் இருப்பதாகவும், அவருக்கு இருமுறை திருமணம் நடைபெறும் என ஜாதக பலனில் கூறியுள்ளனர். இதனால் தார தோஷ பரிகாரமாக முதலில் ஆடு ஒன்றிற்கு ரமேஷ் தாலி கட்டியுள்ளார். நவகிரக கோவிலில் வைத்து ஆட்டுடன் ரமேஷிற்கு திருமணம் முடிந்தது. இதையடுத்து, முறையாக பெண் பார்த்து அவருக்கு திருமணம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்