பூஜை போட்ட போது வெடித்து சிதறிய புது புல்லட்

ஆந்திரா அருகே புதிய புல்லட் வாகனத்திற்கு பூஜை செய்து கொண்டிருந்த போது புல்லட் திடீரென்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
x
ஆந்திரா அருகே புதிய புல்லட் வாகனத்திற்கு பூஜை செய்து கொண்டிருந்த போது புல்லட் திடீரென்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குண்டக்கல்லில் உள்ள கசாபுரத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் புதிதாக வாங்கப்பட்ட புல்லட் வானத்திற்கு பூஜை செய்யப்பட்டது. அப்போது திடீரென்று தீப்பிடித்த நிலையில், தீயை அணைக்க முற்பட்ட போது புல்லட் வெடித்து சிதறியது. இதனால் அங்கிருந்த பொதுமக்கள் பயத்தில் சிதறி ஓடினர். தகவலறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்