புது புல்லட்டுக்கு பூஜை .. திடீரென வெடித்த பயங்கரம் - தெறித்து ஓடிய மக்கள்... ஷாக் காட்சிகள்!

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் குண்டக்கல் மண்டலம் கசாபுரத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது.
x
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் குண்டக்கல் மண்டலம் கசாபுரத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது. கிராமத்திலுள்ள நெத்தி கண்டி ஆஞ்சநேயர் சுவாமி ஆலயத்தில் இந்த புதிதாக வாங்கப்பட்ட புல்லட் வாகனத்திற்கு பூஜை செய்து கொண்டிருந்தபோது வாகனத்தில் தீப்பற்றியது. இதைத்தொடர்ந்து ஆலயத்திற்கு எதிரே உள்ள சாலையில் வாகனத்தை நிறுத்தி தீயை அணைக்க முயன்ற போது திடீரென வெடித்துச் சிதறியது இதனால் அங்கிருந்த பொதுமக்கள் பயத்தில் சிதறி ஓடினர். இதில் வாகனம் முழுவதும் தீ பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்