எலி கடித்ததில் ஐசியு நோயாளி உயிரிழப்பு - அதிர்ச்சி சம்பவம்

வாராங்கல்லில் உள்ள மாகாத்மா காந்தி நினைவு மருத்துவமனையில் 38 வயதான ஸ்ரீனிவாஸ் என்பவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
x
வாராங்கல்லில் உள்ள மாகாத்மா காந்தி நினைவு மருத்துவமனையில் 38 வயதான ஸ்ரீனிவாஸ் என்பவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். மதுப்பழக்கத்தால் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட ஸ்ரீனிவாசனுக்கு ஐசியுவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் ஐசியுவில் எலிக்கடித்ததில் அதிகளவிலான ரத்தப்போக்கு ஏற்பட்டு ஸ்ரீனிவாசன் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.  இடப்பக்கம் முழுவதும் ரத்த போக்கு இருந்ததற்கான ஆதாரத்தையும் கொடுத்துள்ளனர். புகாரை தொடர்ந்து ஐசியு பிரிவு தலைவர் இடைநீக்கம் செய்யப்பட்டதுடன், மருத்துவமனை கண்காணிப்பாளர் இடமாற்றம் செய்யப்பட்டார். பணியில் இருந்த இரு மருத்துவர்களும் நீக்கப்பட்டனர். இது தொடர்பாக பேசிய மருத்துவமனை செவிலியர்கள், மருத்துவமனையில் உள்ள கழிவு நீர் குழாய் சேதமடைந்து இருப்பதால் அதன் மூலம் ஐசியு பிரிவுக்கு எலிகள் வருவதாகவும், அனைத்தையும் கடித்து குதறி விடுவதாகவும் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்