அமோக மது விற்பனை...! கோடியில் உச்சம் தொட்ட வருவாய்!

புதுச்சேரியில், மது விற்பனை மூலம் முதல் முறையாக அதிகபட்ச வருவாயாக ஆயிரத்து 63 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
x
புதுச்சேரியில் 350க்கும் மேற்பட்ட சில்லறை மற்றும் மொத்த விற்பனை மதுபானகடைகள் உள்ளன. கொரோனா பாதிப்பால் புதுச்சேரியில் மது விலை உயர்த்தப்பட்டது. இதனால் நடப்பு நிதியாண்டில் முதல் முறையாக அதிகபட்சமாக ஆயிரத்து 63 கோடி வருவாய் கலால்துறை மூலம் அரசுக்கு கிடைத்துள்ளது.

இந்தியாவில் தயாராகும் விஸ்கி, பிராந்தி உள்ளிட்ட வெளிநாட்டு மதுபானங்கள் மூலம் ‌778 கோடி ரூபாயும், பீர் மூலம் 151 கோடி ரூபாயும் வருவாய் கிடைத்துள்ளது. இதைபோல் சாராயக்கடை மற்றும் கள்ளுக்கடை கிஸ்தி மூலம் 63 கோடி ரூபாயும், புதுப்பித்தல் மற்றும் பிராண்ட் லேபில் பதிவு மூலம் 60 .5 கோடி ரூபாயும் வருவாய் கிடைத்துள்ளது. 20 சதவீதம் சிறப்பு கலால் வரி மற்றும் ஆன்-லைன் மூலம் கண்காணித்தல், சட்டவிரோத விற்பனையை தடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கை மூலம் அதிக வருவாய் ஈட்ட முடிந்ததாக கலால் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்