பெண்கள் உணவகத்தில் மர்ம கும்பல் துப்பாக்கி சூடு - பஸ் டிரைவர் பரிதாப பலி

கேரள மாநிலம் இடுக்கியை அடுத்த மூலமட்டம் பகுதியில் பெண்கள் நடத்தி வரும் உணவகத்தில் திடீரென மர்மகும்பல் துப்பாக்கி சூடு நடத்தியதில் பேருந்து ஓட்டுநர் பலியானார்.
x
கேரள மாநிலம் இடுக்கியை அடுத்த மூலமட்டம் பகுதியில் பெண்கள் சிலர் சேர்ந்து உணவகம் ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்த உணவகத்திற்கு சாப்பிட வந்த சிலர், பெண்களுடன் பிரச்சினையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இருதரப்புக்கும் இடையே திடீரென பிரச்சினை வெடித்ததில் அந்த கும்பல் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் உணவகத்தை நோக்கி சுட்டது. இதில் அந்த வழியாக வந்த பேருந்து ஓட்டுநரான சனல்பாபு மீது குண்டு பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். சத்தம் கேட்டு திரண்டு வந்த மக்கள், துப்பாக்கியால் சுட முயன்ற கும்பலை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் தப்பி ஓடிய நிலையில் போலீசார் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது முட்டம் பகுதியை சேர்ந்த பிலிப் என்பவர் பிடிபட்ட நிலையில் அவருடன் வந்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்