திடீரென்று பற்றி எரிந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரால் பரபரப்பு
புனேயில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மின்சார ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்ததில், அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் நிகழவில்லை.
புனேயில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மின்சார ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்ததில், அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் நிகழவில்லை. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிகம் பகிரப்பட்டு வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து ஓலா நிறுவனம் பதிலளித்துள்ளது. அதில், விபத்திற்கான மூல காரணத்தைப் புரிந்து கொள்ள விசாரணை மேற்கொண்டு உள்ளதாகவும், வாடிக்கையாளருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாகனப் பாதுகாப்பு மிக முக்கியமானது என்று தெரிவித்துள்ள ஓலா நிறுவனம், தங்கள் தயாரிப்புகளில் மிக உயர்ந்த தரமான தரத்திற்கு தாங்கள் கடமைப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுத்து, வரும் நாட்களில் தகவலை பகிர்ந்து கொள்வதாக ஓலா நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Next Story