காந்தியின் கொள்ளு பேரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு... விரைந்து விசாரிக்க முடிவு!

சபர்மதி ஆசிரம மறு மேம்பாட்டு திட்டத்துக்கு எதிராக காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் அருண் காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.
x
அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தை ஆயிரத்து 200 கோடி ரூபாய் செலவில், மறுமேம்பாடு செய்ய குஜராத் மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தால் சபர்மதி ஆசிரமம் உள்கட்டமைப்பு மாற்றி அமைக்கப்பட்டு, காந்திஜியின் தத்துவங்களில் ஒன்றாக உள்ள களங்கமற்ற எளிமையின் அடையாளம் சிதைக்கப்படும் என தெரிவித்து மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் அருண் காந்தி மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் கடந்தாண்டு நவம்பர் 25-ஆம் தேதி தள்ளுபடி செய்தது. இதற்கு எதிராக துஷார் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க கோரி மூத்த வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன் ஆஜராகி முறையிட்டார். முறையீட்டை பரிசீலித்த நீதிபதிகள் மேல்முறையீட்டு மனு விரைந்து விசாரிக்கப்படும் என தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்