பாதியில் நிறுத்தப்பட்ட "ஆர்.ஆர்.ஆர்" - ஆத்திரத்தில் திரையரங்கை சூறையாடிய ரசிகர்கள்

ஆந்திராவில் பிரபல இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்துள்ள ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டதால், ரசிகர்கள் திரையரங்கத்தை சூறையாடினர்.
x
ஆந்திராவில் பிரபல இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்துள்ள ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டதால், ரசிகர்கள் திரையரங்கத்தை சூறையாடினர்.தெலுங்கு முன்னணி நடிகர் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் இணைந்து நடித்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ஐந்து மொழிகளில் இன்று வெளியாகியது. ஆந்திர மாநிலம், விஜயவாடா நகரில் உள்ள அன்னபூர்ணா திரையரங்கில் இத்திரைப்படம் திரையிடப்பட்டது. அப்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதியிலேயே திரைப்படம் நிறுத்தப்பட்டதால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர். தொடர்ந்து திரையரங்க நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அடித்து நொறுக்கி சூறையாடினர். இது குறித்து தகவலறிந்த போலீசார், ரசிகர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றினர். 

Next Story

மேலும் செய்திகள்