"மார்ச் 28, 29ஆம் தேதிகளில் வங்கிகள் செயல்படாது"

மார்ச் 28 மற்றும் 29ஆம் தேதிகளில் நடைபெறும் நாடு தழுவிய பொது வேலை நிறுத்த‌த்தால் அஞ்சல்துறை, வங்கிகள் செயல்படாது என மத்திய அரசு ஊழியர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
x
மார்ச் 28 மற்றும் 29ஆம் தேதிகளில் நடைபெறும் நாடு தழுவிய பொது வேலை நிறுத்த‌த்தால் அஞ்சல்துறை, வங்கிகள் செயல்படாது என மத்திய அரசு ஊழியர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அரசு ஊழியர் கூட்டமைப்பினர், தமிழகத்தில் 30 லட்சம் பேர் வேலை நிறுத்த‌த்தில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தனர். இலங்கையின் தவறான பொருளாதாரக் கொள்கையால், விலைவாசி உயர்ந்து அங்குள்ள மக்கள் உணவுக்காக இந்தியா நோக்கி வருவதாகவும், அதே போன்ற நிலையை இந்தியா சந்திக்கப் போவதாகவும் எச்சரித்தனர். 8 லட்சத்து 75 ஆயிரம் மத்திய அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவித்த ஊழியர் சங்கத்தினர், ஒவ்வொரு ஊழியரும் 3 பேரின் வேலைகளை பார்க்க நிர்பந்திக்கப்படுவதாக குற்றம்சாட்டினர். வரும் மார்ச் 28 மற்றும் 29ஆம் தேதிகளில் நடைபெறும் நாடுதழுவிய வேலை நிறுத்த‌தால், அஞ்சல்துறை, வங்கிகள் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் இயங்காது என்றும் அவர்கள் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்