இருமுறை பாம்பு கடியில் இருந்து தப்பிய மாணவி...மூன்றாவது முறையில் பலியான சோகம்

தெலங்கானா மாநிலம், அடிலாபாத் மாவட்டம், பெட்டோட்டா கிராமத்தை சேர்ந்தவர் சுபாஷ். இவரது மகள் பிரானலி, தனியார் கல்லூரி ஒன்றில் இளங்கலை பட்டம் படித்து வந்தார்.
x
தெலங்கானா மாநிலம், அடிலாபாத் மாவட்டம், பெட்டோட்டா கிராமத்தை சேர்ந்தவர் சுபாஷ். இவரது மகள் பிரானலி, தனியார் கல்லூரி ஒன்றில் இளங்கலை பட்டம் படித்து வந்தார். இந்நிலையில், கடந்தாண்டு செப்டம்பர் மாதமும், இந்தாண்டு ஜனவரி மாதமும், மாணவி பிரானலி பாம்பு கடித்துள்ளது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதித்து, சுமார் 5 லட்சம் வரையில் செலவழித்த பிறகு பிரானலி உயிர் பிழைத்தார். உடல்நிலை தேறி வந்த பிரானலியை, கடந்த 18 ஆம் தேதி கல்லூரி பை-யில் இருந்த பாம்பு ஒன்று கடித்துள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரானலி, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து 3 முறை பாம்பு கடித்து, மாணவி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்