காவல் நிலையம் சென்று போலீசிடம் புகார் தெரிவித்த யுகேஜி சிறுவன் - வைரல் வீடியோ

ஆந்திராவில் ஆறு வயது சிறுவன் ஒருவன், காவல் நிலையம் சென்று தனது பள்ளி அருகே உள்ள கடும் போக்குவரத்து நெரிசலை சரி செய்து கொடுக்குமாறு புகாரளித்துள்ளான்.
x
ஆந்திராவில் ஆறு வயது சிறுவன் ஒருவன், காவல் நிலையம் சென்று தனது பள்ளி அருகே உள்ள கடும் போக்குவரத்து நெரிசலை சரி செய்து கொடுக்குமாறு புகாரளித்துள்ளான். மழலை குரலில் போலீஸாருடன் அமர்ந்து சிறுவன் கார்த்திகேயன் புகாரளிப்பது காண்போரை வெகுவாக ரசிக்க வைத்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆந்திர மாநிலம் பலமனேரி அருகே அந்த சிறுவன் படிக்கும் பள்ளி உள்ளது. சிறுவனின் புகாரை ஆர்வமுடன் கேட்ட போலீசார், சிறுவனுக்கு இனிப்புகள் கொடுத்து உபசரித்ததோடு, தாங்கள் வந்து போக்குவரத்தை சரி செய்வதாக உறுதியும் அளித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்