யூடியூபில் பதிவு செய்ய விஷ பாம்புகளுடன் வீடியோ எடுத்தவருக்கு நேர்ந்த விபரீதம்

சமூகவலைதளத்தில் பதிவிடுவதற்காக வீடியோ எடுத்தபோது, பாம்பு பிடி நிபுணரை விஷப்பாம்பு கடித்த காட்சி வைரலாகியுள்ளது.
x
சமூகவலைதளத்தில் பதிவிடுவதற்காக வீடியோ எடுத்தபோது,  பாம்பு பிடி நிபுணரை விஷப்பாம்பு கடித்த காட்சி வைரலாகியுள்ளது. கர்நாடகாவின் கார்வார் மாவட்டத்தைச் சேர்ந்த பாம்பு பிடி நிபுணரான மாஸ் அகமது, ஒவ்வொரு முறை பாம்பு பிடிக்கும் போதும், அதனை வீடியோ எடுத்து, தனது யூட்யூப் தளத்தில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, வெவ்வேறு இடங்களில் பிடித்த மூன்று பாம்புகளை, ஒரே நேரத்தில் தனது கட்டுப்பாட்டில் இருப்பது போல் வீடியோ பதிவு செய்ய மாஸ் அகமது முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அதிலிருந்த ஒரு விஷப் பாம்பு அவரைக் கடித்தது.

Next Story

மேலும் செய்திகள்