ஹிஜாப் விவகாரம் - உச்சநீதிமன்றம் முடிவு

ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீடு மனுவை ஹோலி விடுமுறைக்கு பின் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
x
ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீடு மனுவை ஹோலி விடுமுறைக்கு பின் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதித்து கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. ஹிஜாப் அணிவது இஸ்லாம் மதத்தில் அத்தியாவசியமாக பின்பற்றப்படும் நிகழ்வு அல்ல என்றும், சீருடை குறித்து உத்தரவிடும் அதிகாரம் அரசுக்கு உள்ளதாகவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக மாணவி நிபா நாஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக வேறு சிலரும் முறையிட்டுள்ள காரணத்தால், ஹோலி பண்டிகை விடுமுறைக்குப் பிறகு மேல்முறையீடு மனுவை விசாரிப்பது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்