மீன் ஏற்றுவது போல் நடித்து - லாரி திருடனை மடக்கி பிடித்த போலீசார்

துறைமுகத்தில் மீன் ஏற்றுவது போல் நடித்து, காரைக்கால் போலீசார் லாரி திருடனை கைது செய்துள்ளனர்.
x
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து இரு தினங்களுக்கு முன்பாக கனரக லாரி திருடப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையை தொடங்கிய காரைக்கால் போலீசாருக்கு, கடத்தப்பட்ட லாரி திருவாரூரில் விபத்துக்குள்ளானதாக தகவல் கிடைத்தது. கடத்தப்பட்ட லாரிதான் விபத்துக்குள்ளானது என்பதை உறுதி செய்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசாருக்கு, வலங்கைமானை சேர்ந்த ஐயப்பன் லாரியை திருடியதும், அவர் காரைக்கால் துறைமுகத்திற்கு வந்து செல்வதும் தெரிய வந்தது. இதனையடுத்து காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் மீன் ஏற்றுவதுபோல் நடித்து, கண்காணித்த போலீசார், அங்கு வந்த ஐயப்பனை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்