பாமக நிர்வாகி மீது சிறுமிகள் பாலியல் புகார் - மாவட்ட எஸ்.பி. அதிரடி உத்தரவு

செங்கல்பட்டு அருகே சிறுமிகள் வெளியிட்ட வீடியோ தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த வீடியோவை யாரும் பகிர வேண்டாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.
x
செங்கல்பட்டு அருகே சிறுமிகள் வெளியிட்ட வீடியோ தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த வீடியோவை யாரும் பகிர வேண்டாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 2 சிறுமிகளுக்கு அதே பகுதியை சேர்ந்த பாமக நிர்வாகி ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த அந்த சிறுமிகள் தற்கொலை செய்து கொள்வதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டனர். இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வழக்குப்பதிவு செய்து உரிய விசாரணை நடந்து வருவதாகவும், சிறுமிகளின் வீடியோக்களை யாரும் பகிர வேண்டாம் என்றும் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்