வலையில் சிக்கிய அரிய வகை பலூன் மீன்! - ஆபத்து கண்டால் பலூன் போல் பெருத்து விடும்

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் மீனவர்கள் வலையில் அரிய வகை பலூன் மீன் ஒன்று சிக்கியுள்ளது.
x
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் மீனவர்கள் வலையில் அரிய வகை பலூன் மீன் ஒன்று சிக்கியுள்ளது. கோதாவரி மாவட்ட மீனவர்கள் வங்கக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அவர்கள் வலையில் பலூன் மீன் என்றழைக்கப்படும் அரிய வகை மீன் ஒன்று சிக்கியது. தண்ணீருக்குள் இருக்கும்போது சாதாரணமாகக் காட்சியளிக்கும் இந்த மீன், ஆபத்து ஏற்பட்டால் காற்றை உள்வாங்கி பலூன் போல் பெருத்து விடும் தன்மை உடையது...மேலும் இந்த பலூன் மீன் கொடிய விஷத்தை கக்கும் தன்மை உடையது என்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்