பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா கைது

துணை ஆணையர் வாகனத்தின் மீது கார் மோதிய புகாரில் பேடிஎம் நிறுவனர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
x
 துணை ஆணையர் வாகனத்தின் மீது கார் மோதிய புகாரில் பேடிஎம் நிறுவனர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். பிப்ரவரி 22ம் தேதி டெல்லியில் நின்றிருந்த மாவட்ட காவல் ஆணையர் வாகனம் மீது வேகமாக வந்த விலை உயர்ந்த கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. காவலர் தீபக் குமார் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் காரின் பதிவு எண்ணை கொண்டு அதன் உரிமையாளர்களை அடையாளம் கண்டனர். பின்னர் கார் உரிமையாளரான பேடிஎம் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான விஜய் சேகர் ஷர்மா மால்வியா நகர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார்.

Next Story

மேலும் செய்திகள்