தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் - தேவேந்திர பட்னாவிஸிடம் சைபர் கிரைம் விசாரணை

காவல்துறை பணியிட மாற்றத்தில் நடந்த ஊழல் மற்றும் தொலைபேசி ஒட்டுகேட்பு வழக்கில் மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸிடம் மும்பை சைபைர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
x
காவல்துறை பணியிட மாற்றத்தில் நடந்த ஊழல் மற்றும் தொலைபேசி ஒட்டுகேட்பு வழக்கில் மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸிடம் மும்பை சைபைர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பாஜக மூத்த தலைவரான தேவேந்திர பட்னாவிஸ் போலீஸ் அதிகாரிகளின் பணியிட மாற்றத்தில் ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டி இருந்தார். இது தொடர்பாக மாநில உளவுப்பிரிவு தலைவராக இருந்த ராஷ்மி சுக்லா, அப்போதைய டிஜிபிக்கு அனுப்பிய தொலைபேசி ஒட்டுகேட்பு கடித்தத்தையும் பட்னாவிஸ் வெளியிட்டார். இதனால் அரசின் ரகசியங்களை கசிய விட்டதற்காக ராஷ்மி சுக்லா மீது மும்பை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில், விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு தேவேந்திர பட்னாவிஸ்க்கும் நோட்டீஸ் அனுப்பட்டது. இன்று அவரிடம் விசாரணை மேற்கொள்வதை ஒட்டி மலபார் ஹில் பகுதியில் உள்ள பட்னாவிஸ் வீட்டிற்கும், மும்பை சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கும் தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்