பஞ்சாப் தேர்தல் வெற்றி - பொற்கோவிலில் கெஜ்ரிவால், பகவந்த் மான் வழிபாடு
பஞ்சாப் தேர்தல் வெற்றி - பொற்கோவிலில் கெஜ்ரிவால், பகவந்த் மான் வழிபாடு
பஞ்சாப் மாநில முதல்வராக பொறுப்பேற்கவுள்ள பகவந்த் மான் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் பஞ்சாப் அமிர்தரஸ் பொற்கோவிலில் வழிபாடு மேற்கொண்டுள்ளனர். பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில், பகவந்த் மான் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் அமிர்தரசில் உள்ள பொற்கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினர். தொடர்ந்து ஜாலியன் வாலாபாக் நினைவிடத்திற்கு சென்ற அவர்கள், மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
Next Story