இந்தியா - சீனாவிடையே 15வது கட்ட பேச்சுவார்த்தை - முடிவுக்கு வருமா எல்லை தகராறு?

கிழக்கு லடாக் பகுதியில் நிலவும் தகராறு தொடர்பாக இந்தியா - சீனாவிடையே 15வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
x
கிழக்கு லடாக் பகுதியில் நிலவும் தகராறு தொடர்பாக இந்தியா - சீனாவிடையே 15வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்ட பேட்ரோலிங் பாய்ன்ட் -15 எனப்படும்  ரோந்து பகுதியில் நிலவும் பதற்றத்தை குறைக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. ராணுவ கமாண்டர்கள் மட்டத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் இருதரப்புக்கும் சாதகமான முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதால் பேச்சுவார்த்தையில் முன்னேற்ற சூழல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்