காந்தியின் கனவு - உறுதி பூண்டுள்ள பிரதமர் மோடி

75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில் மகாதமா காந்தியின் கனவை நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
x
5 மாநில தேர்தல் முடிவுகளை தொடர்ந்து, சொந்த மாநிலமான குஜராத்துக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற பஞ்சாயத்து ராஜ் பிரதிநிதிகள் கூட்டத்தில் பேசினார். ஊரக மேம்பாடு, தன்னிறைவு கிராமங்கள், வலிமையான கிராமங்கள் என்பது குறித்து எப்போதும் மகாத்மா காந்தி பேசியதாக கூறிய பிரதமர், 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில் அவரது கனவை நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார். இயற்கை விவசாயத்துக்கு, அரசு ஏராளமான முயற்சி மேற்கொள்வதாக கூறிய பிரதமர், ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தது 75 பேர் இயற்கை விவசாயம் செய்வதை உறுதிபடுத்த வேண்டும், 75 மரக் கன்றுகளை நட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த 13 கோடி ரூபாய் செலவழித்துள்ளதாகவும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்