தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர் : ரயில் மோதி விபத்து

தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர் மீது ரயில் மோதியதில் வலது கை துண்டானது.
x
கேரளாவில் தண்டவாளத்தை கடக்க முயன்றவர் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள ஆலுவாவில் ரயில் பாதையை தமிழகத்தை சேர்ந்த லட்சுமிபதி என்பவர் கடக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவ்வழியில் ஜனசதாப்தி ரயில் வந்துள்ளது.

ரயில் மோதியதில் லட்சுமிபதியின் வலது கை துண்டானது. லட்சுமிபதியை மீட்ட காவல்துறையினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்