"மரம் ஏறும் ஸ்கூட்டர்" - கண்டுபிடித்து அசத்திய விவசாயி

பாக்கு கொட்டைகளை சேகரிக்க இந்திய விவசாயி ஒருவர் மரம் ஏறும் ஸ்கூட்டர் ஒன்றைக் கண்டு பிடித்து அசத்தியுள்ளார்.
x
பாக்கு கொட்டைகளை சேகரிக்க இந்திய விவசாயி ஒருவர் மரம் ஏறும் ஸ்கூட்டர் ஒன்றைக் கண்டு பிடித்து அசத்தியுள்ளார். கர்நாடகா மாநிலம் மங்களூருவைச் சேர்ந்த விவசாயி கணபதி பட், தான் கண்டுபிடித்த மர ஸ்கூட்டரில் 20 அடி உயர மரத்தில் வெறும் ஐந்தே நொடிகளில் ஏறி பாக்கு கொட்டைகளை சேகரிக்கிறார். பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க இயலாததாலும், மழைக்காலங்களில் பாக்கு கொட்டைகளை சேகரிப்பதில் ஏற்பட்ட சிரமத்தாலும் கணேஷ் பட் தானே முயற்சித்து மரம் ஏறும் ஸ்கூட்டரைக் கண்டறிந்துள்ளார். இந்த ஸ்கூட்டர் சுமார் 62 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், இதுவரை 300க்கும் அதிகமான ஸ்கூட்டர்கள் விற்றுத் தீர்ந்துள்ளதாக கணேஷ் பட் பெருமிதம் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்