பாகனை காலால் மிதித்த யானை - அதிர்ச்சி காட்சிகள்

கேரளாவில் யானை ஒன்று காலால் உதைத்து மிதித்ததில் பாகன் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
x
கேரளாவில் யானை ஒன்று காலால் உதைத்து மிதித்ததில் பாகன் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொல்லத்தில் கோயில் திருவிழாவிற்காக யானை ஒன்று அழைத்து வரப்பட்ட நிலையில், அதற்குத் துணையாக 2 பாகன்கள் வந்திருந்தனர். அப்போது யானையின் மேல் இருந்த பாகன் கீழே விழுந்த பையை எடுக்க இறங்கிய நிலையில், யானையின் முன்பிருந்த மற்றொரு பாகன் யானையின் முன்னங்காலில் அங்குசத்தை வைத்து தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த யானை கீழே இறங்கிய பாகனை காலால் உதைத்துத் தள்ளி தும்பிக்கையால் தாக்கியது. இதைக் கண்டு அதிர்ந்த மற்றொரு பாகன் யானையின் வாலைப் பிடித்து இழுத்ததால் மீண்டும் கோபம் அடைந்து பாகனை யானை காலால் மிதித்தது. இதில் உடலில் பல இடங்களில் பாகனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதால், அவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல்துறை விசாரணையில் யானை பயந்து தாக்கியதாக பாகன் தெரிவித்த நிலையில், இது தொடர்பான பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்