"எங்க டீச்சர்ஸ் என்ன அடிக்கிறாங்க" - காவல் நிலையத்திற்கு 3ம் வகுப்பு சிறுவன் தனியே சென்று புகார்

ஆசிரியர்கள் அடிப்பதாக 3ஆம் வகுப்பு சிறுவன் தயக்கம் இல்லாமல் காவல் நிலையத்தில் புகார்
x
ஆசிரியர்கள் தன்னை அடிப்பதாக மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவன், காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் நிகழ்ந்தது. மகபூப் நகர் மாவட்டம் பையாரம் நகர காவல் நிலையத்துக்கு சென்ற மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் அணில், தனது ஆசிரியர்களான சன்னி, வெங்கட் ஆகியோர் அடிப்பதாக புகார் அளித்தான். சிறுவனின் குற்றச்சாட்டை கேட்ட போலீசார், நேரடியாக பள்ளிக்குச் சென்று மாணவர்களை அடிக்கக் கூடாது என அறிவுரை கூறியதாக தெரிகிறது. மேலும், அந்த சிறுவன் அணிலுக்கு அறிவுரை வழங்கி, போலீசார் அனுப்பி வைத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்