சக வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய பி.எஸ்.எப். காவலர் - 5 பேர் உயிரிழப்பு

சக வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய பி.எஸ்.எப். காவலர் - 5 பேர் உயிரிழப்பு
x
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே எல்லைப் பாதுகாப்பு படை காவலர் ஒருவர் சக வீரர்கள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். பஞ்சாப் மாநிலம் அட்டாரி-வாகா எல்லைக்கு 20 கிலோமீட்டர் தொலைவில் காசா பகுதியில் 144 வது பி.எஸ்.எப். பட்டாலியன் முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமில், இன்று, எல்லைப்பாதுகாப்பு படை வீரர், சதேப்பா என்பவர், அங்கிருந்த சக வீரர்களை திடீரென துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் 4 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒரு வீரர் படுகாயம் அடைந்தார். அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்திய சதேப்பாவும் உயிரிழந்தார். ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. சக காவலர்கள் மீது, சதேப்பா துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணம் என்ன என்பது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக எல்லை பாதுகாப்பு படை தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்