"நகரங்களில் நதி திருவிழா நடத்த நடவடிக்கை" - பிரதமர் மோடி

"நகரங்களில் நதி திருவிழா நடத்த நடவடிக்கை" - பிரதமர் மோடி
நகரங்களில் நதி திருவிழா நடத்த நடவடிக்கை - பிரதமர் மோடி
x
புனேவில் உள்ள முளா -முத்தா நதியின் புத்துயிர் திட்டத்திற்காக ஆயிரத்து 80 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெறும் இந்த திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பின்னர் எலட்ரிக் பேருந்துகள் மற்றும் அதன் பணிமனைகளுக்கான கட்டுமான பணியை  தொடங்கி வைத்தார். ஒரு மணியளவில் சிம்பயோசிஸ் பல்கலைக்கழகத்தின் பொன்விழா கொண்டாட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த நிகழ்வுகளின்போது பேசிய அவர், ஒவ்வொரு நகரில் மின்சார வகன போக்குவரத்திலும், பசுமை வாகனங்களின் பயன்பாட்டிலும் அரசு கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார். கழிவு மேலாண்மையை உயர்த்துவதிலும் அரசு ஒருங்கிணைந்து செயல்படுவதாக குறிப்பிட்டார். மேலும் தண்ணீரை முறையாக பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நகரங்களில் நதி திருவிழாக்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்