டாட்டூ போட வரும் பெண்களிடம் அத்துமீறியவர் கைது | Kerala

பாலியல் வன்கொடுமை செய்ததாக இளம்பெண் புகார்
x
டாட்டூ போட வரும் பெண்களுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் டாட்டூ கலைஞரை கொச்சி போலீசார் கைது செய்தனர். கொச்சின் எடப்பள்ளியில் டாட்டூ போடும் ஸ்டுடியோ வைத்திருந்த சுஜீஷ், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக 18 வயது பெண் புகார் அளித்திருந்தார். டாட்டூ செலுத்த அவரது ஸ்டுடியோவுக்கு சென்ற போது வன்கொடுமை செய்ததாக செய்ததாக கூறினார். இளம்பெண்ணை தொடர்ந்து 35வயது பெண்ணும் சுஜீஸ் மீது பாலியல் புகார் அளித்தார். தொடர்ந்து 6 பேர் வரை புகார் அளித்ததால் அச்சமடைந்த சுஜீஸ் தலைமறைவாகினார். அடுத்தடுத்த புகார்களின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் கொச்சிக்கு அருகே சுஜீஸை கைது செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்