ஆப்ரேஷன் கங்கா திட்டம்... "உக்ரைனில் இருந்து 10,800 இந்தியர்கள் மீட்பு" - மத்திய அரசு

உக்ரைனில் இருந்து இதுவரை சுமார் 10 ஆயிரத்து 800 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
x
உக்ரைனில் இருந்து இதுவரை சுமார் 10 ஆயிரத்து 800 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் உட்பட 17 சிறப்பு விமானங்கள் இன்று இந்தியா திரும்பின. இதில் 630 பேர் தாயகம் திரும்பினர். உக்ரைனில் உள்ள இந்தியர்கள், உக்ரைனின் அண்டை நாடுகளில் இருந்து தாயகம் திரும்பி வருகின்றனர். இந்நிலையில், 
இதுவரை இயக்கப்பட்ட 43 சிறப்பு விமானங்கள், சி-17 போர் விமானங்களில், இதுவரை 10 ஆயிரத்து 800 பேர் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர். நாளை 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வருவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, 9.7 டன் நிவாரண பொருட்கள் உக்ரைன் நாட்டிற்கு அனுப்பப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்