பள்ளி விடுதியில் பா‌ம்பு கடித்து மாணவர் உயிரிழப்பு

ஆந்திராவில் பள்ளி விடுதியில் தூங்கிக் கொண்டிருந்த மாணவர் பாம்பு கடித்து பலியன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
x
ஆந்திராவில் பள்ளி விடுதியில் தூங்கிக் கொண்டிருந்த மாணவர் பாம்பு கடித்து பலியன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள குருபம் நகரில் ஜோதிபாபுலே பிற்படுத்தப்பட்டோர் நல ஆண்கள் பள்ளி விடுதி உள்ளது. இங்கு நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்த 8ம் வகுப்பு மாணவரான வம்சி, ரஞ்சித், நவீன் ஆகிய 3 மாணவர்களை விச பாம்பு கடித்துள்ளது. இந்நிலையில் மாணவர்கள் மூவரும் மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்து செல்லப்பட நிலையில், அங்கு ரஞ்சித் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் வம்சி மற்றும் நவீன் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த மாவட்ட இணை ஆட்சியர் மகேஷ் குமார் மாணவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து காவல் துறையினர் இசம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்