அமைச்சரை கொல்ல ரூ.15 கோடி பேரம்

அமைச்சரை கொல்ல ரூ.15 கோடி பேரம்
x
கடந்த 25ம் தேதி ஃபரூக் மற்றும் ஹைதர் அலி தங்களை யாதய்யா, நாகராஜ் மற்றும் விஸ்வநாத் ஆகியோர் தாக்குவதாக புகார் அளித்தனர். அதனடிப்படையில் மூவரையும் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், ராகவேந்திர ராஜூ, முன்னூர் ரவி மற்றும் மதுசூதனன் ராஜூ அமைச்சர் ஸ்ரீனிவாஸ் கவுடாவை கொலை செய்ய திட்டமிட்டிருப்பது தெரிய வந்தது. மூவரும் முன்னாள்  எம்பி ஜிதேந்தர் ரெட்டியின் ஓட்டுநர் பொறுப்பில் டெல்லியில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீசார் அவர்களை கைது செய்து ஐதரபாத்திற்கு அழைத்து வந்தனர். ராகவேந்திரா ராஜு மற்றும் முன்னூர் ரவியிடம் இருந்து துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. விசாரணையில் மூவரும் அமைச்சர் ஸ்ரீனிவாஸ் கவுடாவை கொலை செய்ய 15 கோடி ரூபாய் வரை பேரம் பேசியது தெரிய வந்தது. இதையடுத்து அமைச்சரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக 8 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 


Next Story

மேலும் செய்திகள்