உக்ரைன் விவகாரம் எதிரொலி - பிரதமர் மோடி இன்று ஆலோசனை

உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் இன்று உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
x
உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் இன்று உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் வான்வெளி மற்றும் நேரடி ராணுவ படைகள் மூலம் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே, உக்ரைனிலுள்ள மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று  ரஷ்ய அதிபர் புதின் உறுதியளித்துள்ளார். இருப்பினும்,  உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க, மத்திய அரசு  பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் இன்று மதியம் 12 மணியளவில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில், இந்தியர்களை மீட்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்