"இந்திய தடுப்பூசிக்காக பல நாடுகள் காத்திருந்தன" - உன்னாவ் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச்சு

இந்திய தடுப்பூசிக்காக பல நாடுகள் காத்துக் கொண்டிருக்கும் போது, இங்குள்ள சிலர் தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
x
உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், சமாஜ்வாதி ஆட்சியில் 24 மணி நேரமும் வன்முறை ஊரடங்கு என இருந்ததாக குறிப்பிட்டார். உத்தர பிரதேசத்தை பாஜக அரசு, இருளிலிருந்து வெளியே கொண்டு வந்ததாக தெரிவித்தார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிக்காக, இன்று உலகின் பல நாடுகள் வரிசையில் காத்துக் கொண்டிருந்ததாக கூறினார். லட்சக்கணக்கானோரின் உயிரை காப்பாற்றிய தடுப்பூசிக்கு எதிராக, இங்கு உள்ள சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் பிரதமர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்