கட்டுப்பாட்டை இழந்து லாரியின் மீது மோதிய கார் - திருப்பதி சென்று திரும்பிய போது பயங்கர விபத்து

திருப்பதி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்னால் மோதியதில் ஒரு குழந்தை உள்பட 4 பேர் உடல் நசுங்கி பலியானார்கள்.
கட்டுப்பாட்டை இழந்து லாரியின் மீது மோதிய கார் - திருப்பதி சென்று திரும்பிய போது பயங்கர விபத்து
x
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர்கள் சுவாதி. இவர் தனது குடும்பத்தாருடன் திருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்து விட்டு வேலூர் தங்க கோயிலுக்கு புறப்பட்டுள்ளனர். அப்போது, திருப்பதி அருகே உள்ள ஐதே பள்ளி பகுதியில் கார் வந்துகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் ஓட்டுனர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்