லக்கீம்பூர் வன்முறை சம்பவம் குறித்த வழக்கு

லக்கீம்பூர் வன்முறை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டஆஷிஷ் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட ஜாமின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
லக்கீம்பூர் வன்முறை சம்பவம் குறித்த வழக்கு
x
லக்கீம்பூர் வன்முறை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ராஜீவ் சிங் ஜாமின் வழங்க கடந்த 10 ஆம் தேதி உத்தரவிட்டார். இந்நிலையில், 
வழக்குரைஞர்கள் சிவகுமார் திரிபாதி, சி.எஸ். பாண்டா சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ஜாமின் வழங்கிய அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவு தவறு என்பது தெளிவாகிறது என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்