பிரசவ வலியால் துடித்த பெண்:கட்டிலில் தூக்கி செல்லும் கர்ப்பிணி பெண் - ஆம்புலன்ஸில் பிறந்த ஆண் குழந்தை

தெலுங்கானாவில் பிரசவ வலி ஏற்பட்ட கர்ப்பிணி பெண்ணை கட்டிலில் வைத்து, தண்ணீர் நிரம்பிய ஓடையை கடந்து எடுத்து செல்ல 3 மணி நேரம் தாமதமானால், ஆம்புலன்ஸிலேயே குழந்தை பிறந்தது.
பிரசவ வலியால் துடித்த பெண்:கட்டிலில் தூக்கி செல்லும் கர்ப்பிணி பெண் - ஆம்புலன்ஸில் பிறந்த ஆண் குழந்தை
x
தெலுங்கானாவின் நக்களபள்ளி கிராமத்தை சேர்ந்த சுபத்ரா என்ற நிறைமாத மலைவாசி பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.  அண்மையில் பெய்த மழையால்  கிராமத்தில் உள்ள ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் சாலை  துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரசவ வலியால் துடித்த சுபத்ராவை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வந்த ஆம்புலன்ஸ் ஓடையில் தண்ணீர் ஓடுவதால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. வேறு வழியின்றி, ஆம்புலன்ஸ் ஊழியர்களும், கிராமத்தினரும் கட்டிலில் படுத்திருந்த சுபத்ராவை தூக்கியப்படி ஓடையை கடந்தனர். பின்னர் ஆம்புலன்ஸில் ஏற்றி செல்லப்பட்ட அந்த பெண்ணிற்கு வலி அதிகரிக்க, மருத்துவர்களின் அறிவுரைப்படி ஆம்புலன்ஸ் செவிலியர்கள் பிரசவம் பார்த்தனர். அவருக்கு அழகான ஆண்குழந்தை பிறந்த நிலையில் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்