"மாநிலங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கு தடை வேண்டாம் - மத்திய உள்துறை அமைச்சகம் மீண்டும் கடிதம்"

மாநிலங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கு தடை வேண்டாம் என்று, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் மீண்டும் கடிதம் எழுதியுள்ளது.
x
மாநிலங்களுக்குள்ளும், மாநிலங்களுக்கு வெளியேயும் செல்ல இ பாஸ் தேவையில்லை என்று, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாநில அரசுகளின் செயல்பாடுகளினால் சரக்கு போக்குவரத்து தடைபடுவதாக மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. வேலைவாய்ப்பு தடைபட்டு பொருளாதாரம் பாதிக்கப்படுவதாகவும் மத்திய அரசு வேதனை தெரிவித்துள்ளது. மாநில அரசுகளின் கட்டுப்பாடுகள் ஊரடங்கு தளர்வு வழிகாட்டு நெறிமுறைகளுக்கு முரணானது என்றும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே அத்தகைய கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது எனவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்