வெங்காயம் விலை 200ரூபாய்... விவசாயிகளுக்கு கிடைப்பதோ வெறும் 7 ரூபாய் - ப.சிதம்பரம்

அடுத்த ஜி.எஸ்.டி., கூட்டத்தில், 1 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு பொருட்களின் வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
x
அடுத்த ஜி.எஸ்.டி., கூட்டத்தில், 1 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு பொருட்களின் வரியை  உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற  பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று  பேசினார். அப்போது , டெல்லி சந்தையில் வெங்காயம் கிலோ 200 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும்,  ஆனால் அதை விளைவிக்கும் விவசாயிகளுக்கு கிலோவிற்கு வெறும் 7 ரூபாய் தான் கிடைப்பதாகவும்  கூறினார். 
 

Next Story

மேலும் செய்திகள்