காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி : வெற்றிச்சான்றிதழை பெற்றுக்கொண்டார் ஜான்குமார்

புதுச்சேரி காமராஜர் நகர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் வெற்றி பெற்றுள்ளார்.
x
கடந்த 21-ஆம் தேதி நடைபெற்ற காமராஜ் நகர் இடைத்தேர்தலில், காங்கிரஸ் சார்பில் ஜான்குமாரும், என்.ஆர்.காங்கிரஸ் சார்பில், புவனேஸ்வரனும் போட்டியிட்டனர். பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று வாக்குகள் எண்ணப்பட்டன. காமராஜ் நகர் தொகுதியில் பதிவான வாக்குகள் மொத்தம் 3 சுற்றுகளாக எண்ணப்பட்டன. அதில், காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் 14 ஆயிரத்து 782 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன் 7 ஆயிரத்து 611 ஓட்டுக்கள் மட்டுமே பெற்று தோல்வி அண்டைந்துள்ளார். புவனேஸ்வரனை விட காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார், 7ஆயிரத்து 171 ஓட்டுக்கள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. காமராஜ் நகர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அதிகாரிகள் ஜான்குமாரிடம் வழங்கினர். காமராஜ் நகர் தொகுதியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து காங்கிரஸ் தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். 


Next Story

மேலும் செய்திகள்