திருப்பதி : பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூல் - 23 இடைத்தரகர்கள் கைது

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்டம் காத்திருப்பு அறையில் தரிசனத்திற்காக சென்ற பக்தர்களை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
திருப்பதி : பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூல் - 23 இடைத்தரகர்கள் கைது
x
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்டம் காத்திருப்பு அறையில் தரிசனத்திற்காக சென்ற பக்தர்களை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது வி.ஐ.பி தரிசன டிக்கெட் வைத்திருந்த 5 பக்தர்களை பிடித்து விசாரித்ததில், அவர்கள் இடைத்தரகர் ஸ்ரீநிவாஸ் நாயுடு என்பவர் மூலம் கூடூர் தொகுதி எம்எல்ஏவின் பெயரில் டிக்கெட் வா​ங்கியது தெரியவந்தது. இதற்காக அவர்களிடம் பல ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து ஸ்ரீநிவாஸ் நாயுடு உள்ளிட்ட 23  இடைத்தரகர்களை போலீசார் கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்