சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கு - டி.கே.சிவக்குமாருக்கு 9 நாள் விசாரணை காவல்

சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் கைதான கர்நாடக முன்னாள் அமைச்சருமான D.K. சிவக்குமாரை 9 நாள் காவலில் விசாரிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கு - டி.கே.சிவக்குமாருக்கு 9 நாள் விசாரணை காவல்
x
சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் கைதான கர்நாடக முன்னாள் அமைச்சருமான D.K. சிவக்குமாரை, 9 நாள் காவலில் விசாரிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. அமலாக்கத்துறை தொடர்ந்த இந்த வழக்கில், டி.கே. சிவக்குமார், டெல்லி - ரோஸ் அவின்யூவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது, அவரை, 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க, அனுமதிக்குமாறு, அமலாக்கத்துறை சார்பில், வழக்கறிஞர் வாதிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அஜய் குமார் குஹா, வருகிற 13 ம் தேதி வரை சிவகுமாரை காவலில் எடுத்து விசாரிக்க, அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்